டெல்லியில் பெண் காவலர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

  -MMH

   டெல்லியில் பெண் காவலர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து  மேலப்பாளையத்தில் தவ்ஹீத் ஜமாஅத்  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்  பெண்கள் உட்பட திரளானோர்  பங்கேற்றனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் சார்பில் டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட பெண் காவலர்  சபியா  படுகொலைக்கு நீதி கேட்டும்,  குற்றவாளிகளை கைது செய்யாத ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதை கண்டித்தும் மற்றும்  குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும்  நெல்லை மேலப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் மசூத் உஸ்மானி  தலைமையில் நடைபெற்றது. மாநில  செயலாளர் செங்கோட்டை பைசல்  கண்டன உரையாற்றி பேசினார்.  

ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.  ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சுலைமான், செய்யதலி, நெல்லை யூசுப் அலி, அன்சாரி  மற்றும் பெண்கள் உள்பட  திரளானோர்  கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்தியாளர்,

-அன்சாரி, நெல்லை.

Comments