குளிக்க சென்ற முதியவரை முதலை இழுத்துச் சென்று இறையாக்கிய கொடூரம்.!

-MMH

                சிதம்பரம் அருகே உள்ள பழையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் கோபாலகிருஷ்ணன் (65). திமுக பிரமுக|ர். இந்நிலையில் இவர் நேற்று இரவு 7 மணியளவில் பழைய கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றார். அங்கு அவர் குளித்து கொண்டிருந்தபோது திடீரென ஆற்றில் இருந்து வந்த ராட்சத முதலை ஒன்று கோபாலை ஆற்றில் இழுத்து சென்றுவிட்டது. அருகில் குளித்து கொண்டிருந்தவர்கள் கோபாலை முதலை இழுத்து சென்றதை அறிந்து அலறி கூச்சலிட்டனர். இதற்கிடையில் ஆற்றில் குளிக்க சென்ற கோபால் வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் ஆற்றுக்கு ஓடிவந்தனர். அப்போது கோபாலை முதலை இழுத்து சென்ற தகவலை அவர்களிடம் கூறினர். கதறி அழுத அவரது குடும்பத்தினர், இதுகுறித்து சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸ் மட்டும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சிதம்பரம் தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் இறங்கி கோபாலை தேடினர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை. படகில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்களும் இரவு 10.30 வரை தேடினர். அப்போது முதலையின் வாயில் வைத்து கடித்து கொண்டிருந்த கோபாலகிருஷ்ணனை சடலத்தை மீட்க முயன்றனர். ஆனால் முதலை சடலத்தை விடாமல் முரண்டு பிடித்தது. பின்னர் முதலையை அடித்து விரட்டி விட்டு சடலத்தை மீட்டனர். ஆற்றில் குளிக்க சென்ற திமுக பிரமுகரை முதலை விழுங்கிய சம்பவம் இழுத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரு ஆண்டுக்கு முன்பு சகோதரரை விழுங்கிய முதலை கடந்த இரு ஆண்டுக்கு முன்பு கோபால கிருஷ்ணனின் சகோதரர் அறிவானந்தம் என்பவர் பழைய கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றபோது முதலை இழுத்துச்சென்று இறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. சகோதரர் இருவரையும் முதலை இழுத்து சென்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

-N.V.கண்ணபிரான்.

Comments