தற்கொலைகளை தடுக்கும் ஆலோசனை மையம் - விடியல்...

-MMH

        கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் "விடியல்" என்ற பெயரில் தற்கொலைகளை தடுக்க ஆலோசனை வழங்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.இதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் அவர்கள்  நேற்று குத்து விளக்கு ஏற்றியும், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் .இதில் உளவியல் ஆலோசனைகளை பெற 0422-2300999 என்ற எண் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவர் சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு கூறும் படத்தின் சி. டி வெளியிட்டார். இதுகுறித்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:

இயற்கை மரணம் மற்றும் தற்கொலை 174 என்ற சட்டப் பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறோம் கோவை மாவட்டத்தில் தற்கொலை அதிகரித்து வருகிறது நடப்பாண்டில் 174 சட்டப்பிரிவின் கீழ் இதுவரை 959 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன . இதில் 480 தற்கொலை வழக்குகள் ஆகும். இது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட அதிகம் தற்கொலை செய்தவர்களில் 40 சதவீதம் பேர் குடும்ப பிரச்சனை, இருபத்தி ஐந்து சதவீதம் பேர் உடல் நலக்குறைவு, சிலர் கடன் தொல்லை, வேலை இழப்பு, காரணமாக தற்கொலை செய்து உள்ளனர்.தற்கொலைகளை தடுக்க கோவை மாவட்டத்தில் "விடியல்" என்ற ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் 8 போலீசார் பணியில் இருப்பார்கள் இதற்காக பயிற்சி பெற்ற 80 போலீசார் பணியில் ஈடுபடுவார்கள். கடந்த ஆண்டு 11 குழந்தைகளும் நடப்பாண்டில் இதுவரை 5 குழந்தைகளும் தற்கொலை செய்து உள்ளனர். சைபர் குற்றங்களை நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-S.ராஜேந்திரன்.

Comments