பைக் தடுப்பு சுவரில் மோதி வாலிபர் பலி!!

 

  -MMH

   விருதுநகர் முதல் நகரைச் சேர்ந்தவர் சரவணன் (19). இவர் கோவையில் தங்கி கட்டிடத் தொழில் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கோவை சக்தி ரோட்டில் எக்ஸ் டூல்ஸ் மேம்பாலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் அப்போது திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் நடுவே இருந்த தடுப்புச் சுவற்றில் மோதியது. இதில் சரவணன் பலத்த காயம் அடைந்தார். காயமடைந்த சரவணனை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments