சிங்கம்புணரி அருகே குடிபோதையில் நண்பர்களிடையே தகராறு! ஒருவர் கொலை !

 

-MMH

               சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள சதுர்வேதமங்கலம் சிவன்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் மருதுபாண்டியன் (வயது 46). இவர் நேற்று தனது நண்பர் செல்வசேகரன் என்பவருடன் சேர்ந்து, அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவினர் லோகநாதன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் வேலி அடைக்கும் பணியை செய்திருக்கிறார்.

வேலை முடிந்த பின்பு மூவரும் அமர்ந்து மது அருந்தி இருக்கின்றனர். அப்போது அவர்களிடையே ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக மருது பாண்டியன் கத்தியால் குத்தப்பட்டார். கத்தி குத்து காரணமாக குடல் சரிந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிர் பிரிந்தது.

தகவலறிந்து வந்த சதுர்வேதமங்கலம் காவல்துறையினர், மருது பாண்டியனின் உடலைக் கைப்பற்றி சிங்கம்புணரி தாலுகா அரசு மருத்துவமனைக்கு பிணக்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து லோகநாதன் மற்றும் செல்வசேகரன் இருவரிடையே தீவிர விசாரணை மேற்கொண்ட பின்பு அவர்கள் இருவரையும் சதுர்வேதமங்கலம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஒரே வாரத்தில் சிங்கம்புணரி சுற்றுவட்டாரப் பகுதியில் குடிபோதையால் நடந்துள்ள இரண்டாவது கொலை சம்பவம் இதுவாகும்.

-அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments