கோவையில் பரிதாபம்; பேருந்து சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி !!

  -MMH

    கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த ஆறுச்சாமி (43) என்பவர் ஓட்டுனராக உள்ளார். இவர் தனியாருக்கு சொந்தமான பேருந்தை  இயக்கி வந்தார். இவர் கோவை லாலி சாலை பகுதியில் உள்ள பெட்ரோல் நிரப்பும் மையத்தில் தான் இயக்கும் பேருந்தை நிறுத்தியிருந்தார். வழக்கம்போல் பணிக்கு சென்ற அவர், பேருந்தை பெட்ரோல் நிரப்பும் மையத்தில் இருந்து வெளியே எடுக்க பேருந்தை பின்னோக்கி இயக்கியுள்ளார். அப்போது பேருந்தின் பின் சக்கரத்தின் அருகே 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார். அதனை கவனிக்காத பேருந்து ஓட்டுநர் ஆறுச்சாமி பேருந்தை இயக்கி உள்ளார்.அப்போது தூங்கிக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத வாலிபர்  மீது பேருந்தின் சக்கரம்  ஏறியது இதனால் அந்த வாலிபர் அலறி துடித்தார் இதனைக் கண்டு அங்கிருந்தவர்கள் சத்தம் போட்டனர். அவர்களின் சத்தத்தை கேட்ட பிறகே பேருந்து ஓட்டுநர் ஆறுச்சாமி பேருந்தை நிறுத்தி உள்ளார். பின்னர் பேருந்தின் அடியில் சிக்கி இருந்த அந்த அடையாளம் தெரியாத வாலிபரை மீட்டனர் ஆனால் அந்த அடையாளம் தெரியாத வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டது தெரியவந்தது.

இது குறித்து கோவை மாநகர மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த அடையாளம் தெரியாத வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம்  குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டுநர் ஆறுச்சாமியை கைது செய்தனர். மேலும் இறந்த அந்த அடையாளம் தெரியாத வாலிபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments