ராணிப்பேட்டை அருகே பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு ஆம்புலன்சில் சுகப்பிரசவம்!!
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகாவுக்கு உட்பட்ட மேச்சேரி என்ற கிராமத்தில் இருந்து 108 கட்டுப்பாடு அறைக்கு நேற்று காலை 8.16 மணிக்கு பிரசவ வலி தொடர்பாக அவசர அழைப்பு வந்தநிலையில் உடனடியாக கலவை பகுதயில் இயங்கும் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதை அடுத்து மருத்துவ உதவியாளர் வெங்கட்ராமன் மற்றும் ஓட்டுநர் கார்த்திக் ஆகியோர் ஆம்புலன்சில் விரைந்தனர். அங்கு கூலித்தொழிலாளி வினோத் குமார் ( வெல்டர் ) என்பவரின் மனைவி ரேவதி ( 22 ) பிரசவ வலியால் துடித்தார். உடனடியாக அவரை ஆம்புலென்ஸில் ஏற்றிக் கொண்டு கலவை அரசு மருத்துவமனை விரைந்தனர்.
அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். கொண்டு செல்லும் வழியில் ரேவதி அவர்களுக்கு பிரசவ வலி அதிகரித்து. இதனால் வேறுவழியின்றி மருத்துவ உதவியாளர் வெங்கட்ராமன் பிரசவம் பார்த்தார். அப்போது 10:07am மணியளவில் அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்பு தாயும் சேயும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாயும் குழந்தையும் நலமாக உள்ளார்.நாளைய வரலாறு செய்திக்காக,
-P.ரமேஷ்,வேலூர்.
Comments