அருவிகளில் நன்றாக தண்ணீர் விழுகிறது - குளிக்க அனுமதி இல்லை... வியாபாரிகள் புலம்பல் !!

 

-MMH

      தற்போது தமிழ்நாடு அரசு சுற்றுலாத் தலங்களுக்குப் பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் குற்றால அருவிகளில் மட்டும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் குற்றாலத்தை நம்பி வாழும் வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்தனர்.

இந்நிலையில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்குமார் அருவியை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:தற்போது தமிழ்நாடு அரசு சுற்றுலாத் தலங்களுக்குத் தளர்வு வழங்கியுள்ளது. குற்றாலம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள், வியாபாரிகள் என பல்வேறு தரப்பிடமிருந்து குற்றாலத்திற்குள் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என மனுக்கள் தொடர்ந்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து ஆய்வுப் பணிகளை இன்று மேற்கொண்டுள்ளோம்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து விரைவில் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது திமுக மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாபன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் உடனிருந்தனர்.

நாளைய வரலாறு , நெல்லை செய்தியாளர்

-அன்சாரி. 


Comments