கோவையில் இன்று ஏழு மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது !!

-MMH

   எம்பிபிஎஸ் பிடிஎஸ் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் என்ற நுழைவுத் தேர்வு மத்திய அரசின் தேசிய தேர்வு முகமை சார்பில் ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்பட்டு வந்தது ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு தாமதமாக நடந்தது .இந்த ஆண்டும் கொரோனா தொற்று   பரவல் அதிகமாக இருந்ததால் தாமதமாக நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு தொடங்கி 5 மணி வரை நடைபெறுகிறது.இந்தத் தேர்வை கோவை மாவட்டத்தில் உள்ள ஏழு மையங்களில் 6057 பேர் எழுதுகிறார்கள்.

கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி நீட்தேர்வு நடைபெறுகிறது இதற்காக கோவையில் உள்ள அனைத்து தேர்வு மையங்களிலும் நேற்று கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்தது இதுகுறித்து நீட் தேர்வு கண்காணிப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நீட் தேர்வு இன்று மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்குவதால் தேர்வு மையத்திற்குள் காலை 11 மணி முதல் மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்படுவார்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்ட நேரத்திற்கு வர வேண்டும் மாணவிகளுக்கு உடல் வெப்பநிலை ரத்த ஆக்சிஜன்  அளவு ஆகியவை பரிசோதிக்கப்படுகிறதுகைகளை கிருமிநாசினியால் சுத்தப்படுத்திய பிறகே மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் .உடல் வெப்பநிலை அதிகம்  இருப்பவர்கள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவ,  மாணவிகள் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இதன் மூலம் அந்த மாணவ-மாணவிகள் தனிவாகனத்தில் அழைத்துவந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றி தனியறையில் வைத்து தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் அவர்களின் பெயர் விவரம் ரகசியமாக வைக்கப்படும் .கொரோனா தொற்று அறிகுறிகள் இல்லை என்பதை உறுதி செய்த பிறகே மாணவர்கள் படிவத்தில் கையொப்பம் இட வேண்டும் .புகைப்படத்துடன் கூடிய ஹால் டிக்கெட் அரசு வழங்கிய அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் மேலும் கிருமி நாசினி மற்றும் தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். 

தேர்வு மையத்திற்கு மின்னணு பொருட்கள் கொண்டு வர அனுமதி இல்லை. முழுக்கை சட்டை ,ஷூ,சாக்ஸ், நகைகள், அணிந்து வரக்கூடாது சாதாரண செருப்பு மட்டுமே அணிந்து வரவேண்டும் அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது பறக்கும் படை அதிகாரிகளும் அவ்வப்போது தேர்வு மையங்களில் ஆய்வு செய்ய  உள்ளனர்.நீட் தேர்வை ஒட்டி கோவையில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன, இவ்வாறு அவர் கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments