கோவை மருத்துவரை ஏமாற்றியவருக்கு குண்டாஸ் !!

 

-MMH 

               கோவை ராயல்கேர் மருத்துவமனை தலைவர் டாக்டர் மாதேஷ்வரனுக்கு கடன் ஏற்பாடு செய்து தருவதாக கடந்த, 2020 அக்., மாதம் புதுக்கோட்டை, ஆலங்குடியை சேர்ந்த பன்னீர்செல்வம்,55 உள்ளிட்ட, 4 நபர்கள் தொடர்புக் கொண்டு பேசினர்.அப்போது கமிஷன் தொகையாக, 2.85 கோடி ரூபாய் பெற்றவர்கள் மோசடி செய்தனர். கோவை மாநகர குற்றப்பிரிவு, தனிப்படை போலீசார், சென்னையில் பதுங்கியிருந்த பன்னீர்செல்வம், 55 மற்றும் செல்வகுமார், 54 ஆகியோரை கடந்த, 15 ம் தேதி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.இவர்கள் இருவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் நேற்று உத்தரவிட்டார். உத்தரவு நகல் சிறையில் உள்ள இருவரிடமும் வழங்கப்பட்டது.

-சுரேந்தர்.   

Comments