முகநூல் மூலம் பழகி கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்!!

     -MMH

கோவை, ராமநாதபுரத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.இவருக்கும் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்து வரும் நாகராஜ் (வயது 27) என்பவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இந்நிலையில் நாகராஜ் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி திருப்பூர் அழைத்து கட்டாயம் திருமணம் செய்துள்ளார். அந்த மாணவியை மூன்று நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். நாகராஜிடம் இருந்து தப்பித்து வீடு திரும்பிய மாணவி தன் பெற்றோரிடம் நடந்தவற்றை தெரிவித்து உள்ளார். மாணவியின் பெற்றோர் இதுகுறித்து கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, மாணவியை கடத்தி சென்ற நாகராஜீன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து,சிறையில் அடைத்தனர்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments