கோவை குறிச்சி குளத்தில் மிதந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம்!!

  -MMH

   கோவை குறிச்சி குளத்தில் மிதந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை போலிசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கோவை குறிச்சி குளத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக போத்தனூர் போலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீயணைப்பு மீட்புக் குழுவுடன் வந்த போலிசார் குளத்தில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டனர். 

உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். முன்னதாக சடலமாக மீட்கப்பட்டவர் யார் என்பது குறித்து அறிய உள்ளூர் மக்களிடம் இறந்தவரின் புகைப்படத்தை காட்டி போலிசார் விசாரித்து வருகின்றனர். சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

- சீனி,போத்தனூர்.

Comments