சொத்து விவகாரத்தில் கோவை பா.ஐ நிர்வாகி கட்டப்பஞ்சாயத்து..! 8 நாட்களாக எப்.ஐ.ஆர் போடாத மதுக்கரை போலீஸ்..!!

 -MMH

சொத்து பிரச்சினையில் கட்டப்பஞ்சாயத்துக்கு உடன்படாததால் கோவை பத்திரிகையாளர் பூபதி வீடு புகுந்து கொலை முயற்சியில் ஈடுபட்ட கும்பல் மீது கோவை -மதுக்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகார் அளித்து 8 நாட்களுக்கு மேலாகியும் எப்.ஐ.ஆர் போட்டு கைது நடவடிக்கை இதுவரை எடுக்காத நிலையில் மீண்டும் சொத்துக்காக கொன்று விடுவதாக மிரட்டும் கும்பலிடம் இருந்து உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு வேண்டி தமிழக முதல்வர் தனிப்பிரிவு, கோவை கலெக்டர் சமீரன், கோவை எஸ்.பி செல்வநாகரத்தினம், பேரூர் டி.எஸ்.பி திருமால், கோவை சரக ஐ.ஜி சுதாகர், டி.ஜி.பி சைலேந்திரபாபு உள்ளிட்டோரிடம் புகார் மனு தரப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், மதுக்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட நாச்சிபாளையத்தில் மறைந்த ரங்கசாமிக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் 8 ஆண்டுகளாக தாய் தெய்வானை  மற்றும் அவரது மகனும் பத்திரிகையாளருமான கே.பூபதி வசிக்கின்றனர்.

ரங்கசாமி வாரிசுதாரர்களாக மொத்தம் 9 பேர் உள்ளனர். இதில் 7 பேர் வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்த சொத்து மற்றும் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு  ரங்கசாமி பெயரில் இன்னும் உள்ளது.

இந்த சொத்து பிரச்சினையில் நாச்சிபாளையம் பஞ்சாயத்து தலைவி சசிபிரியா கணவரும் கோவை தெற்கு மாவட்ட பா.ஜ பொதுச்செயலாளர் அப்பு என்கிற கிருஷ்ணசாமி தொடர்ந்து தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்து வந்தார்.

இறுதியாக நீதிமன்றத்தில் தங்களுக்கும் தங்கள் உறவினர்களும் இடையில் உள்ள சொத்து பிரச்சினைக்கு தீர்வு பெற்று கொள்வதாக வீட்டுக்கு வந்து பஞ்சாயத்து பேசிய பா.ஜ நிர்வாகியிடம் பத்திரிகையாளர் பூபதி மற்றும் அவரது தாய் தெய்வானை தெளிவாக தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பா.ஜ நிர்வாகி, குடிநீர், மின் இணைப்பை 5-9-2021 ல் தெய்வானை அண்ணன் நாச்சிமுத்து மனைவி கார்த்திகேயனி மற்றும் கார்த்திகேயனி மருமகன் வடிவேல், செல்வக்குமார் உள்ளிட்டோரிடம் கூறி துண்டிக்க செய்தார்.

இதுதொடர்பாக மின் இணைப்பு வேண்டி பாலத்துறை மின்வாரியத்திற்கும், குடிநீர் குழாய் உடைப்பு குறித்து பஞ்சாயத்துக்கும் புகார் மனு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் மேற்கண்ட கார்த்திகேயனி உள்ளிட்ட நபர்கள் சொத்து பிரச்சினையில் தங்கள் சொல்படி நடக்கவில்லை என்ற ஆத்திரத்தில் தெய்வானை, பூபதி ஆகியோரை தினசரி வீட்டுக்கு வந்து பா.ஜ நிர்வாகிகளின் ஆட்கள் டார்ச்சர் செய்தும் மிரட்டியும் வந்தனர்.

மேலும் பா.ஜ நிர்வாகி தூண்டுதல் பேரில் உறவினர்கள் மதுக்கரை காவல்துறையில் 17-9-21 ல் புகார் அளித்தனர்.  நீதிமன்றத்தை அணுகி, மேற்கண்ட சொத்து வழக்கில் தீர்வு பெற்று கொள்வதாக இருதரப்பிலும் மனு தரப்பட்டது. மனு அளித்து விட்டு வெளியில் வரும்போது ஸ்டேசன் வாசலில் கார்த்திகேயனி உள்ளிட்ட 12 பேர் கடும் கொலை மிரட்டல் விடுத்தனர்.

 இதுதொடர்பாக ஸ்டேசனில் பணியில் இருந்த எஸ்.ஜ மற்றும் போலீசாரிடம் வாய்மொழியாக புகார் செய்துவிட்டு நாச்சிபாளையம் வீட்டுக்கு தாயும் மகனும் திரும்பினர்.

இந்நிலையில் உறவினர்கள் 8 பேர் மற்றும் கில்மோர், ரமேஸ், நாச்சிபாளையம் பஞ்சாயத்து தலைவி சசிபிரியா கணவர் அப்பு என்கிற கிருஷ்ணசாமி, பா.ஜ நிர்வாகி சந்திரசேகர், நாச்சிபாளையம் புரோக்கர் பிரகாஷ் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட ரவுடிகள் 27-9-2021 அன்று இரவு 8 மணியளவில், நாச்சிபாளையம் கிராமத்தில் உள்ள 64 வயது மூதாட்டி தெய்வானை வீட்டுக்குள் புகுந்து கொலைவெறியுடன் தாக்குதல் நடத்தினர். பத்திரிகையாளர் பூபதியிடம் 2 போன்களை பிடுங்கி கொண்டனர். 

நீ பத்திரிகையில் புடுங்கிடுவியா என சாதி பெயரை சொல்லி திட்டியும் ரீப்பர் கட்டை, கைகள், இரும்பு குழாயில் அடித்து தாக்கினர். இதுதொடர்பாக கோவை எஸ்.பி அலுவலகத்திற்கு சம்பவம் நடைபெறும் போதே தொலைபேசியில் புகார் அளித்ததன் பேரில், நாச்சிபாளையம் வந்து மதுக்கரை ஆய்வாளர் வைரம் நேரில் விசாரிக்கும் போதும் இரவு 9.30 மணியளவில் தாக்கிய அனைவரும் வீட்டு முன்பு நின்றிருந்தனர்.

பின்னர் காவல்துறை பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனையில் பத்திரிகையாளர் ஆர்.கே.பூபதி, அவரது தாய் தெய்வானை இருவரும் இரவு 11 மணியளவில் சேர்ந்தனர். இதுவரை மதுக்கரை போலீசார் எப்.ஐ.ஆர் பதிந்து கைது நடவடிக்கை எடுக்காத நிலையில்,

"எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் நாச்சிபாளையம் பஞ்சாயத்து ( பாரதிய ஜனதா கட்சி) தலைவி சசிபிரியா கணவர் அப்பு என்கிற கிருஷ்ணசாமி கும்பலும், கில்மோர், ரமேஷ் உள்ளிட்ட நபர்களும் மற்றும் உறவினர்கள் 8  பேருமே பொறுப்பு.

தங்கள் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபுவுக்கும்  பத்திரிகையாளர் பூபதியும் அவரது தாயும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை கலெக்டர் சமீரன், கோவை எஸ்.பி செல்வநாகரத்தினம், பேரூர் டி.எஸ்.பி திருமால், கோவை சரக ஐ.ஜி சுதாகர், டி.ஜி.பி சைலேந்திரபாபு, தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு தரப்பட்டுள்ளது.

உயிர், உடமைக்கு பாதுகாப்பு கேட்டும், பா.ஜ நிர்வாகிகள் அப்பு என்கிற கிருஷ்ணசாமி, சந்திரசேகர் உள்ளிட்ட ரவுடி கும்பல் மீது எப்.ஐ.ஆர் போட்டு கைது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை மனுவில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

இரவு 8 மணியளவில் துணிச்சலாக கொலைவெறியுடன் தாக்குதல் நடைபெற்றது நிரூபணமான நிலையில் 8 நாட்களாக பா.ஜ நிர்வாகிகள் மீது எப்.ஐ.ஆர் போட்டு கும்பலிலும், தூண்டுதலாக இருந்த உறவினர்களிலும் ஒருவரை கூட மதுக்கரை போலீசார் கைது செய்யாதது ஏன்?

கோவை அரசு மருத்துவமனையில் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பெற்ற நிலையில் மதுக்கரை போலீசார் எப்.ஐ.ஆரை சட்டப்படி போட்டே ஆக வேண்டும் எனவும், எந்த காரணத்தை கூறியும் தாமதிக்க முடியாது எனவும் காவல்துறை உயரதிகாரிகள் கவனத்திற்கு சென்ற ஒரு தாக்குதல் வழக்கில் மதுக்கரை காவல்துறை மெத்தனம் காட்டுவது வியப்பளிக்கிறது எனவும் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் கவனத்திற்கு சென்றாலே போதும் எப்.ஐ.ஆர் போடப்பட்டு விடும். 

நீதிமன்றத்தில் டைரக்சன் வாங்கியும் எப்.ஐ.ஆர் போட வைக்க சட்டத்தில் வழி உள்ளது என பிரபல மூத்த வழக்கறிஞரும், தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கோகுல்ராஜ் வழக்கை கையாண்டு வருபவருமான சட்ட நிபுணர் பவானி ப.மோகன் கருத்து தெரிவித்தார்.

மேலும் மேற்கண்ட தாக்குதல் சம்பவம், காவல்துறை மெத்தனம் குறித்து தி.வி.க தலைவர் கொளத்தூர் மணி கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கோவை தாக்குதல் சம்பவம் தொடர்பாக முதல்வர் நேரடி கவனத்திற்கும் சென்னை பத்திரிகையாளர்கள் கொண்டு செல்ல தீர்மானித்துள்ளனர். பத்திரிகையாளர் பாதுகாப்பு விவகாரம் தமிழகத்தில் கேள்விக்குறியாகியுள்ளது. 

இந்த விவகாரத்தில் காவல்துறையை தமது பொறுப்பில் வைத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை கோவை அடாவடி பா.ஜ. நிர்வாகிகள் மீது எந்த நேரமும் பாயலாம்.

இவர்கள் அராஜகம் குறித்தும் வன்முறை குறித்தும் தேசிய, தமிழக பா.ஜ கட்சி தலைமைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பா.ஜ நிர்வாகிகள் வெறியாட்டம் சட்டத்தின் துணை கொண்டு முறியடிக்கப்படும். தமிழக முதல்வர் கவனத்திற்கு ஆதாரங்களுடன் பத்திரிகை, ஊடக நண்பர்கள் துணையுடன் கொண்டு செல்லவும் முயற்சித்து வருகிறேன். இதற்காக வழக்கறிஞர் உதவியை நாடியுள்ளேன் என பத்திரிகையாளர் கே.பூபதி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தாக்குதல் சம்பவம் நடைபெற்றது, 27-9-21 இரவு 7.45 மணி முதல் 8.30 மணி வரை. அப்போதே கோவை சரக ஐ.ஜி சுதாகர் உள்ளிட்ட தமிழக காவல்துறை உயரதிகாரிகளுக்கு போனில் தகவல் தரப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு ஜீப்பில் விரைந்து வந்து விசாரணை நடத்திய மதுக்கரை ஆய்வாளர் வைரத்திடம் வாய்மொழியாக வாக்குமூலம் தரப்பட்டது. அன்று இரவு 10 மணியளவில் மதுக்கரை போலீஸ் ஸ்டேஷனில் எழுத்துப்பூர்வமாக புகார் தரப்பட்டது.

அதற்குபிறகு உள்நோக்கத்துடன் பா.ஜ நிர்வாகிகள் தரப்பு 3 பொய் புகார்களை மதுக்கரை காவல்நிலையத்தில் அளித்து தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி பத்திரிகையாளர் கே.பூபதி மீது 3 சி.எஸ்.ஆர் போடப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் கே.பூபதி உண்மை புகார் மூலம் சட்ட நடவடிக்கைக்கு பயந்துபோன கும்பல், 3 ஆதாரமில்லாத பொய் புகார்களை கையில் வைத்து மிரட்டி வருகிறது.

ஒரு உண்மை புகாரை 100 பொய் புகார்களை கொடுத்தாலும் மூடி மறைக்க முடியாது.

சட்டமும் நீதியும் வலிமையானது !

சொத்து சிவில் பிரச்சினையில் பஞ்சாயத்து தலைவி சசிபிரியா கணவர் அப்பு என்கிற கிருஸ்ணசாமி பஞ்சாயத்து செய்தார் என அவரே ஒப்புக் கொண்டு மதுக்கரை காவல்நிலையத்தில் எழுதி கொடுத்த கடிதம்.

சட்டத்தை கையில் எடுத்து கொண்டு கொலை வெறி தாக்குதல் நடத்தி பத்திரிகையாளர் கே.பூபதியிடம்  போன்களை பறித்ததை ஒப்புக் கொண்டுள்ளார், பா.ஜ நிர்வாகி

எப்.ஐ.ஆர் போட்டு கைது செய்ய உத்தரவிடுவாரா?

நேர்மையான தமிழ்நாடு டி.ஜி.பி அவர்கள்!

-கே.பூபதி.


Comments