சிவந்திபட்டி பஞ்சாயத்து தலைவராக 90 வயது மூதாட்டி வெற்றி பெற்றார்!!

  -MMH
  பாளையங்கோட்டை யூனியன் சிவந்திபட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தலில் 90 வயது நிரம்பிய மூதாட்டி பெருமாத்தாள் போட்டியிட்டார். அங்கு பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதில் பெருமாத்தாள் 1,558 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட செல்வராணி, உமா ஆகியோர் வைப்புத்தொகையை இழந்தனர். வெற்றி வாகை சூடிய மூதாட்டி பெருமாத்தாளுக்கு அவரது ஆதரவாளர்கள் மாலை அணிவித்து அழைத்து சென்றனர்.

நாளைய வரலாறு செய்தியாளர்,

-அன்சாரி, நெல்லை.

Comments