சிங்கம்புணரி சுற்றுவட்டாரத்தில் நாளை மின் தடை!!

     -MMH

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி துணை மின்நிலையத்திலிருந்து புதிதாக சில தடங்களில் உயர் அழுத்த மின் பாதைகள் நாளை அமைக்கப்பட உள்ளது. மேலும் சிங்கம்புணரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளும் நாளை (11-10-21) திங்கட்கிழமை அன்று நடைபெற உள்ளது.

இதன் காரணமாக சிங்கம்புணரி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான சிங்கம்புணரி நகர், பிரான்மலை, வேங்கைப்பட்டி, வையாபுரிபட்டி, செல்லியம்பட்டி, செருதப்பட்டி, அரசினம்பட்டி, குமரிபட்டி, நாட்டார்மங்கலம், அ.காளாப்பூர், சதுர்வேதமங்கலம், கண்ணமங்கலப்பட்டி, கருங்காலக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (11-10-21) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின் உதவி செயற்பொறியாளர் செல்லத்துறை தகவல் தெரிவித்துள்ளார்.

- அப்துல்சலாம், ராயல் ஹமீது.

Comments