கிணத்துக்கடவு அருகே கார் மோதி வாலிபர் பலி!!

 

  -MMH

   கோவை கிணத்துக்கடவு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வேம்பூர் கரட்டு சாலை யூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மகன் தீபக் (வயது25). கோவை அருகே மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பிட்டராக பணிபுரிந்து வந்தார். தீபக் நேற்று மதியம் கிணத்துக்கடவு அடுத்து கல்லாங்காடுபுதூர் பகுதியில் நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.அப்போது கல்லாங்காடுபுதூர் பகுதியிலுள்ள ரோட்டில் இடைவெளியில் தீபக் மோட்டார்சைக்கிளில் ரோட்டை கடக்க முயன்ற போது பின்னால் கோவையிலிருந்து அதிவேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. கார் மோதியதில் பலத்த காயமடைந்த தீபக் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீபக் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments