பாலத்தின் அடியில் நடைபாதை சீரமைக்க மக்கள் கோரிக்கை..!!

 -MMH

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகிலுள்ள வெம்படிதாளம் ரயில்வே பாலம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதால் பாலத்தின் அடியில் புல் புததருடன் மக்கள் நடமாட முடியாத அளவில் காணப்படுவதாலும்போக்குவரத்துக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்தப் பாலத்தை கடந்து தான் இளம்பிள்ளை நகராட்சி உட்பட்ட எடப்பாடி, ஜலகண்டபுரம், கங்கவல்லி, மேச்சேரி,  தாரமங்கலம், சங்ககிரி, போன்ற ஊர்களுக்கு கடந்து சில முக்கிய பாலமாக உள்ளது  கோயம்புத்தூர் பைபாஸ் செல்வதற்கும்  சிரமமாக இருப்பதாக பொதுமக்கள் கூறிவருகின்றனர்.

இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு அங்குல சாலையை சரி செய்ய வேண்டும் என்றும் புல் புதர்களை அகற்றி தரவேண்டுமென்று அங்கு வசிக்கும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகக்காக,

- ரஞ்சித்குமார், திருச்செங்கோடு.

Comments