கோவையில் நடைபெற்ற வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் உயிரிழப்பு! காவல்துறையினர் விசாரணை! !

 -MMH

கோவை மலுமிச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 28). இவர் தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று பிரவீன்குமார் தனது நண்பர் அய்யப்பன் (33) என்பவருடன் மோட்டார் சைக்கிள் மலுமிச்சம்பட்டியில் இருந்து எல் அண்டு டி பைபாஸ் ரோட்டில் சென்றார்.

அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால், மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில், பிரவீன்குமார், அய்யப்பன் பலத்த காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 அங்கு பிரவீன்குமாரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அய்யப்பனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல சேரன்மாநகரை சேர்ந்தவர் அபிலாஷ் (25) என்பவர் மோட்டார் சைக்கிளில் கோவை-அவினாசி ரோட்டில்   சென்றுகொண்டிருந்தார். பீளமேடு அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த தனியர் பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அபிலாஷ் மோட்டார் சைக்கிளில் மோதியது. 

இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.

Comments