சிறுவாணி அணையின் நீர்மட்டம் 45 அடியாக உயர்ந்தது. தண்ணீர் திறக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது!!

   -MMH 

  கோவையின் குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய சிறுவாணி அணையின் நீர்மட்டம் 45 அடியாக உயர்ந்ததால். நீர் வெளியேற்றப்படுகிறது.

சிறுவாணி அணையின் நீர் மட்டம், 45 அடியாக உயர்ந்ததால், 30 செ. மீ. , உயரத்துக்கு மதகு திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், கேரள வனப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுவாணி அணையின் மொத்த உயரம் - 50 அடி. பாதுகாப்பு காரணங்களை கூறி, 45 அடிக்கே தண்ணீர் தேக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், அணைக்கு நீர் வரத்து காணப்படுகிறது. நேற்றைய தினம், நீர் மட்டம், 45 அடியாக உயர்ந்தது. வரும் மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக, வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த சில நாட்களாக, சிறுவாணியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பதிவாகவில்லை.

மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 30 செ. மீ. , உயரத்துக்கு மதகு திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்படுகிறது

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப் கோவை.

Comments