கோட்டை மேட்டில் மரம் விழுந்து 4 வாகனங்கள் சேதம்!

   -MMH 

  கோவை உக்கடம் கோட்டை மேடு பகுதியில் மழை மற்றும் காற்று காரணமாக 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராட்சத மரம் சாய்ந்து விழுந்து 4 இருசக்கர வாகனங்கள் சேதம். தீயணைப்புதுறையினர்பொதுமக்கள் உதவியோடு மர அறுவை இயந்திரங்களை கொண்டு மரத்தை வெட்டி அகற்றினர். 

கோவையில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வந்த நிலையில் நேற்று மாலை கோவை மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் கனமழை பெய்ததில் கோவை மாநகராட்சிக்கு பின்புரம் உக்கடம் பகுதியில் உள்ள கோட்டைமேடு பகுதியில் 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த மரம் வேறுடன் சாய்ந்து விழுந்தது. இந்த விபத்தில் அங்கு நிறுத்திவைக்கப்பட்டு இருந்த 4 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தது. மழை காரணமாக அப்பகுதி மக்கள் வெளியே வராததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. 

அதேபோல் மரம் சாலையில் விழுந்தமரம் சற்று பின்னோக்கி விழுந்து இருந்தால் குடியிருக்கும் வீடுகளின்மீது விழுந்து பெரும் உயிர்சேதம் ஏற்பட்டு இருக்கும். பெரும் சத்தத்துடன் மரம் விழுந்ததால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சமடைந்ததாக தெரிவித்தனர். மேலும் தீயணைப்புதுறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் விரைந்துவந்த தீயணைப்புதுறையினர் ராட்சத இயந்திரங்களை கொண்டு மரத்தை வெட்டி அகற்தும் பணியில் ஈடுபட்டனர். 50 வருட பழமையான மரம் விழுந்து இப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு  துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-சுரேந்தர், ஹனீப் கோவை.

Comments