சர்க்கரை நோயால் விரக்தி தொழிலாளி தற்கொலை!!

  

   கோவை ராமநாதபுரம் பங்கஜா மில் ரோட்டை சேர்ந்தவர் வடிவேல் (வயது 58). இவர் சில ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இவர் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இருந்தபோதிலும் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரவில்லை என்று தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த வடிவேல் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு

Comments