ஆளே இல்லாத கடையில் டீ ஆகிறது இது தானா..!!! மீண்டும் பாஜகவின் மழை வெள்ள நீர் மீட்புப்பணி ஆகா ஓகோ சாகசம்..!!

    -MMH 

  ஆள் இல்லாத கடையில டீ ஆத்துற இதுதானா? வெள்ளத் தில் இருக்கிறவங்க காப்பாத்த சொன்னா காமெடி பண்றாங்க.

கனமழை எதிரொலி  தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக வெள்ளக்காடாக மாறி  மக்கள் துன்பத்தில் ஆழ்ந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் நாங்களும் மக்களை காப்பாற்றுகிறோம் என்று சொல்லிக் கொண்டு ஒரு கூட்டம் காமெடி பண்ணிக் கொண்டிருப்பது சமூக வலைத்தளங்களிலும் செய்திகளிலும் வந்த வண்ணம் உள்ளது. 

அது போன்ற ஒரு நிகழ்வு தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டி அளவு இருக்கும் தண்ணீரில் ஒருவரை காற்றடித்த ட்யூபில் உட்கார வைத்து இழுத்து வந்து அதே முட்டி  அளவு தண்ணீரில் அவரை இறக்கிவிடும் பாஜக எம்எல்ஏ காந்தி அவர்கள் செய்த இந்த மக்கள் பணி ஆஹா ஓஹோ   ஐயோ என்னடா கொடுமை இது என்று மக்களால்  ''பாரா டபட்ட''' இந்த வீடியோ  சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது . 

மழை வெள்ளத்தில் மீட்புப் பணியில் அரசாங்கமும், காவல்துறை அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களைக் பாதுகாப்பது ஒருபுறம் என்றால். இப்படியும் முட்டி அளவு தண்ணீரில்  இதுபோன்ற மீட்புப்பணி காமெடி நிகழ்வும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. என்னவோ காட்டாற்று வெள்ளத்தில் இருப்பவரை கட்டிக் காப்பாற்றி விட்டவர்கள் போல இவர்கள் செய்யும் இது போன்ற செயல்கள் ஐயோ அம்மா தாங்க முடியலடா ,. இதெல்லாம் உங்களுக்கு தேவையா, அங்காள விட்டிருந்தால் நடந்தே சீக்கிரம்  வீடு போய் சேர்ந்திருப்பார் என்றெல்லாம் நெட்டிசன்கள் இவர்களை கமெண்ட் செய்து வருகிறார்கள். உபகாரம் இல்லாட்டியும் உபத்திரம் செய்யாமல் ஆவது இருங்கள் என்று மக்கள் தங்கள் வேதனைகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

-முகமது சாதிக் அலி.

Comments