சிறுமியை கடத்தி திருமணம் செய்த கூலித் தொழிலாளி..!! பாய்ந்தது போக்சோ சட்டம்..!!

-MMH

     கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் சிறுமியை கடத்தி திருமணம் செய்த கூலித் தொழிலாளி மீது போக்சோ சட்டம் பாய்ந்தது கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜயன் வயது 23 இவர் ஊட்டியில் இருக்கும் தன் உறவினர்களை பார்க்க அடிக்கடி ஊட்டி செல்வது வழக்கம் அப்படி செல்கையில் அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

சில நாட்களுக்கு முன்பு ஊட்டிக்கு சென்ற விஜயன் சிறுமியை சந்தித்து நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். விஜயனின் வார்த்தையை நம்பிய சிறுமி அவருடன் கோவைக்கு வந்துள்ளார்   ஒரு கோயிலில் வைத்து சிறுமிக்கு தாலி கட்டி உள்ளார் விஜயன்.இதை அறிந்த விஜயனின் உறவினர் ஒருவர் அன்னூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். 

தகவலின்பேரில் விஜயன் மற்றும் சிறுமியை தேடி பிடித்த போலீசார் இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் விஜயன் சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி கடத்தி வந்து திருமணம் செய்து உறுதியானதின் பேரில் அவரைக் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி போக்சோ சட்டத்தின் கீழ் விஜயனை சிறையில் அடைத்தனர்.

-முகம்மது சாதிக் அலி.

Comments