முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் செயின் பறிப்பு!!

     -MMH 

கோவை சேரன்மாநகர், சாவித்ரி நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி,58. இவர் தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் முகவரி கேட்டுள்ளனர். 

அப்பெண், வழி சொல்லிக் கொண்டிருந்த போது, அந்த இளைஞர்கள் பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை பறித்து தப்பிச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments