மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டுமான பனி தொழிலாளி பலி!

 

-MMH

    கோவையை அடுத்த ஆலந்துறை காரிமங்கலம் பட்டம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாபு 34, சென்ட்ரிங் தொழிலாளி. இவர் நேற்று சின்ன தடாகம் வீரபாண்டி ரோட்டில் ஒரு புதிய கட்டிடத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது முதல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து ஆலந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்!!

நாளைய வரலாறு  செய்திக்காக 

-ஹனீப் கோவை.

Comments