கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள அற்புத வாய்ப்பு ரிசர்வு வங்கி அறிவிப்பு!!

   -MMH 

  கிழிந்த மற்றும் மாற்றவே முடியாத ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெறும் வசதி அந்தந்த மாநிலங்களின் தலைநகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கிகளில் மட்டுமே இருந்தது. இதனால் கிராம புற ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாத நிலையில் இருந்தனர்.

இதனால் நாடு முழுவதும் மாதந்தோறும் பல கோடி ரூபாய் வீணாகி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அனைத்து விதமான வங்கிகளிலும் கிழிந்த, மாற்றவே முடியாத ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் மாற்றிக்கொள்ளலாம் என கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது.

ஆனால் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் இந்த நடைமுறை பின்பற்ற முடியாமல் போனது. இந்த நிலையில் இனிமேல் பொதுமக்கள் கிழிந்த ரூபாய் நோட்டுகளை எந்த வங்கிகளிலும் மாற்றி கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், "பொதுமக்களுக்கு கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுக்க உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும், போதுமான அளவு சில்லரை நாணயங்களை வழங்கவேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது!!

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப் கோவை.

Comments