கோவையில் மேலும் 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

     -MMH 

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்த நிலையில். நேற்று சுகாதாரத் துறை சார்பில் வெளியிட்ட பட்டியலின்படி கோவையில் புதியதாக 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 496 ஆக உயர்ந்து உள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 97 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். கோவையில் இதுவரையில் 51 ஆயிரத்து 63 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 779 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments