கருங்காலக்குடி சாலை விபத்தில் இளைஞர் பலி!

-MMH

தும்பைப்பட்டியைச் சேர்ந்த முகமது அனிபா என்பவரின் மகன் ராஜா முகமது (31). எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் தும்பைப்பட்டியிலிருந்து கருங்காலக்குடி நோக்கி வந்திருக்கிறார். கருங்காலக்குடியில் இருக்கும் எஸ்.பி.எம் பெட்ரோல் நிலையத்தின் முன்பு வந்துகொண்டிருந்தபோது, அவரது பின்புறமாக வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் ஒன்று அவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டார்.

ராஜா முகமது மீது மோதிய வாகனம் சம்பவ இடத்தில் நிற்காமல் சென்றுவிட்டது. தலையில் பலத்த காயமடைந்த ராஜா முகமதுவை மீட்ட கொட்டாம்பட்டி காவல்துறையினரும், பொதுமக்களும் சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ராஜா முகமது உயிரிழந்தார். இதையடுத்து ராஜா முகமதுவின் தந்தை அளித்த புகாரின் பேரில் கொட்டாம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.

-மதுரை வெண்புலி, ராயல் ஹமீது.

Comments