எந்த விதமான முன் அறிவிப்புமின்றி மலை வாழ் மக்கள் குடில்களை அப்புறபடித்தி வனத்துறை அதிகாரிகள் அத்துமீறல்!!
ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை பகுதியில் கல்லார் குடி கிராமத்தில் எந்த விதமான முன் அறிவிப்புமின்றி மலை வாழ் மக்கள் குடில்களை அப்புறபடித்தி வனத்துறை அதிகாரிகள் அத்துமீறல். வாழவிடுமா பழங்குடி மக்களை .? ஊடக நண்பர்கள் தயவுசெய்து உதவி கரம் கொடுப்பீர்களா ? என்று பழங்குடி மக்கள் உதவி கேட்கின்றனர்.
அவர்களுக்கு பட்டா கொடுத்து 15 நாட்களே ஆகிறது. பட்டா கொடுத்த இடத்தில் அவர்கள் கூரைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்நேரத்தில் வனத்துறையினர் எந்த அறிவிப்பும் இன்றி அப்பகுதி மக்களின் கூரைகளை கத்தியால் வெட்டியும், மேல் கூரைகளை கிழித்தும் அப்பகுதியை அப்புறப்படுத்தினர். ஆகையால் அம்மக்களுக்கு தங்குவதற்கு இடமின்றி தவித்து வருகின்றனர்.
-சா. பிரசாந்த், டாப்ஸ்லிப்.
Comments