எஸ்.எஸ்.கோட்டை அருகே குடும்பத்தகராறு காரணமாக வாலிபர் தற்கொலை!

   -MMH 

   சிவகங்கை மாவட்டம், எஸ்.எஸ்.கோட்டை அருகே உள்ள எம்.அய்யாபட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் வெங்கடேஷ் குமார்(27). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். 

அவருக்கு குடிப்பழக்கமும் இருந்துள்ளது. நேற்று வெங்கடேஷ் குமார் வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த போது, அவருக்கும் அவரது தாயாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக வெங்கடேஷ் குமார், வீட்டிற்குள்ளேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த எஸ்.எஸ்.கோட்டை காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக திருப்பத்தூர் அரசு தாலுகா தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

- அப்துல்சலாம், ராயல் ஹமீது.

Comments