கோவையில் சான்றிதழ் பெற்ற பொற்பணியாளர்கள் சங்க தேர்தல்!! புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்!!

 -MMH 

கோவையில் சான்றிதழ் பெற்ற பொற்பணியாளர்கள் சங்க தேர்தல் நடைபெற்று புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கோவையில் சான்றிதழ் பெற்ற பொற்பணியாளர்கள் சங்க மகாசபை பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சுக்கரவார் பேட்டை பகுதியில் உள்ள கே.பி.எஸ்.வளாகத்தில் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.          

தலைவராக ஆர்.கோபாலகிருஷ்ணன், செயலாளராக சுப்பையா அய்யப்பன், பொருளாளராக கணேசபிரசாத், துணை தலைவர்களாக பி.ரவி, கணகசபாபதி அண்ணாதுரை, கே.பி.எஸ்.ரஜேஷ், துணை செயலாளர்களாக ராஜேஷ்குமார், ரமேஷ் சுரேஷ் லட்சுமணன், ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் கௌரவ ஆலோசகர்களாக நாகராஜ், வெங்கடாசலம், சந்தோஷ் பாலசுப்பிமணியம், கவுரி மனோகாரன் ராஜேந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆர் .கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சமுதாய மக்கள் ஒற்றுமைக்காவும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும் கடந்த  1975ம் ஆண்டு கே. பி.எஸ். அவர்களால் இந்த சங்கம்  துவங்கப்பட்டதாகவும்,. இன்று புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள நிலையில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சமூக மக்களுக்கு அரசு உதவிகள் கிடைக்க வழி வகை செய்யவும்,இந்த சங்கம் பணியாற்ற உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் தற்போது வரை  320 உறுப்பினர்கள் உள்ள நிலையில் புதிய உறுப்பினர் சேர்க்கை  நடைபெறும் என அவர் தெரிவித்தார்.முன்னதாக கூட்ட நிகழ்வை ராஜேஷ் தொகுத்து வழங்கினார்.

- சீனி,போத்தனூர்.

Comments