சிங்கம்புணரி சுற்று வட்டாரத்தில் நாளை மின்தடை!!!

 -MMH 

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி துணை மின் நிலையத்தில் நாளை (13.12.2021) திங்கள்கிழமையன்று பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது.

இந்தப் பராமரிப்புப் பணியின்போது சிங்கம்புணரி துணைமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெரும் பகுதிகளான சிங்கம்புணரி நகர்ப்பகுதி, காசியாபிள்ளை நகர், அரசினம்பட்டி, சிவபுரிப்பட்டி, குறிஞ்சி நகர் முத்துவடுக சுவாமி நகர், நாட்டார்மங்கலம், கண்ணமங்கலப்பட்டி, பிரான்மலை, செல்லியம்பட்டி, கோட்டை வேங்கைப்பட்டி, சதுர்வேதமங்கலம், அ.காளாப்பூர் மற்றும் செருதப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என சிங்கம்புணரி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

எனவே, பொதுமக்கள் முன் தயாரிப்போடு இருக்குமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.

- ராயல் ஹமீது & அப்துல்சலாம்.

Comments