முப்படை தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததை அடுத்து புதிய ராணுவ தளபதி நியமனம்...!!
இந்தியாவின் முப்படைகளுக்கும் தலைமை தளபதியாக இருந்தவர் பிபின் ராவத். குன்னூரில் நடைபெற்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இதில் ராணுவ தளபதி பிபின் ராவத்தும் ஒருவர். இதனால் முப்படைகளுக்கான தலைமை தளபதி பதவி தற்காலிகமாக இருந்தது.
இந்த நிலையில் முப்படை தலைமை தளபதி தேர்வு செய்யப்படும் வரை எம்.எம். நரவானே குழு தலைவராக செயல்படுவார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
-ஈஷா,கோவை.
Comments