போலீசார் நடத்தும் விழிப்புணர்வு கூட்டங்கள்!!

     -MMH 

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ. கா. ப. , அவர்களின் உத்தரவின் பேரில் ஆலாந்துறை, செட்டிபாளையம் மற்றும் காருண்யா நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் துறையினர் தனியார் மற்றும் அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தை திருமணம், போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள், சக மாணவ மாணவிகளிடையே ராக்கிங் செய்வதால் ஏற்படும் விளைவுகள், குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

போக்சோ, சிசிடிவி கேமரா பொருத்துதல், சாலை விதிகளை பின்பற்றுவது பற்றியும், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம், பூட்டிய வீட்டை பாதுகாப்பதற்கு கோவை மாவட்ட காவல் துறையினரால் அறிமுகம் செய்த சகோ செயலி பற்றியும், கொரோனா பரவும் தீவிரம் பற்றியும், மன அழுத்தமா? போதைக்கு அடிமையா? குடும்பப் பிரச்சனையா? கவலை வேண்டாம் உடனே அழைத்திடுங்கள்

விடியலை-04222300999 என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப், கோவை.

Comments