குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது!!

    -MMH 

    ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. தீபா சத்யன் IPS அவர்களின் உத்தரவின் பேரில் வாலாஜாபேட்டை காவல் நிலையத்தின் சார்பில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி வாலாஜாபேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் வாலாஜா நகராட்சி மத்திய பள்ளியிலும் வாலாஜா போலீஸாரால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுடன் பெற்றோர்களும் பங்குபெற்றனர் அவர்களுக்கு சைல்டு லைன் அவசர போன் நம்பரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் ராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளர் , வாலாஜா காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர்களின் செல்போன் நம்பர் தெரிவிக்கப்பட்டது.


-ரமேஷ், வேலூர்.

Comments