சிங்கம்புணரியில் 14கிலோ குட்கா வைத்திருந்தவர் கையும் களவுமாக கைது!

   -MMH 

   சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சுற்றுவட்டாரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருளான குட்கா விற்பனைக்கு எதிராக சிங்கம்புணரி காவல்துறையினர் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

                                                          

இன்று காலை சிங்கம்புனரி செட்டியார் குளம் பகுதியில் வாகன தணிக்கையில் சிங்கம்புணரி காவல் சார்பு ஆய்வாளர் குகன் தலைமையிலான காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த, முகமது ஹாரிஸ் என்பவரது வாகனத்தை ஆய்வு செய்தனர். அவரது வாகனத்தில் விற்பனைக்காக கொண்டு சென்ற சுமார் 52 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 14கிலோ குட்கா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு, சிங்கம்புணரி நீதித்துறை நடுவர் முன்பாக நேர் நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

- ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments