கோவையில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்வு! நேற்று ஒரே நாளில் 309 பேருக்கு தொற்று உறுதி!!.

   -MMH 

   கோவை மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை கடந்த 5 நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 259 பேருக்கு கொரோனா உறுதியானது. அதுவே நேற்று கொரோனா பாதிப்பு யாரும் எதிர்பாராத வகையில் கிடுகிடுவென உயர்ந்து 309 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 54 ஆயிரத்து 330-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 95 பூரண குணமடைந்து வீடு திரும்பினர். அதன்படி இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரத்து 503 பேர் குணமடைந்து உள்ளனர்.

இதுதவிர கோவை தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 83 வயது முதியவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 522 ஆக அதிகரித்தது. 

மேலும் கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1,305-ஆக உயர்ந்து உள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 10-ந் தேதி ஒரே நாளில் 338 பேருக்கு கொரோனா உறுதியானது. அதன் பின்னர் 6  மாதத்திற்கு பிறகு இரு மடங்காக உயர்ந்து மீண்டும் 300-ஐ தாண்டியது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments