கோவையில் 4 மாதங்களுக்கு பிறகு கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 200-ஐ தாண்டியது! நேற்று ஒரே நாளில் 259 பேருக்கு தொற்று உறுதியானது!!

 

-MMH

      கோவை மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை கடந்த 2 வாரத்துக்கும் மேலாக சற்று குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக தொற்று எண்ணிக்கை சற்று அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 120 பேருக்கு கொரோனா உறுதியானது. அதுவே நேற்று கொரோனா பாதிப்பு திடீரென மளமளவென உயர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 259 ஆனது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 54 ஆயிரத்து 18-ஆக உயர்ந்தது. மேலும் நேற்று ஒரே நாளில் 97 பூரண குணமடைந்து வீடு திரும்பினர். அதன்படி இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரத்து 408 பேர் குணமடைந்து உள்ளனர். 

இதற்கிடையில் கொரோனா தொற்று காரணமாக கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 94 வயது, 65 வயது முதியவர்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 67 வயது மூதாட்டி என 3 பேர் உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 521 ஆக அதிகரித்தது. அத்துடன் கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1,089- ஆக உயர்ந்து உள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ந் தேதி ஒரே நாளில் 210 பேருக்கு கொரோனா உறுதியானது. அதன் பின்னர் 4 மாதங்களுக்கு பிறகு இரு மடங்காக உயர்ந்து மீண்டும் 200-ஐ தாண்டியது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments