வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் 7 நாட்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் அரசு அதிரடி உத்தரவு..!!

   -MMH 

    உலக நாடுகளில் மீண்டும் உருமாறிய கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது . இந்த சூழ்நிலையில் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது இதில் ஒரு கட்டுப்பாட்டு விதியாக  வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகள் தங்களை கட்டாயம் ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எட்டாம் நாள் பிசிஆர் பரிசோதனை செய்து சுகாதாரத் துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வருகின்ற ஜனவரி 15ஆம் தேதிக்கு மேல் புதிய கட்டுப்பாடுகளும் வரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-சாதிக் அலி.


Comments