பெண் குழந்தையை கொன்ற பெற்றோர் ..!!!கொடூரம் ???

   -MMH 

   தம்பதியினர் 3-வதாகவும் பிறந்த பெண் குழந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள பெரியகட்டளை கிராமத்தில் முத்துப்பாண்டி-கௌசல்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான கௌசல்யாவுக்கு கடந்த 21-ஆம் தேதி 3-வதாக பெண் குழந்தை பிறந்தது. ஆனால் சில நாட்களிலேயே அந்த குழந்தை இறந்து விட்டதால் யாருக்கும் தெரியாமல் குழந்தையை முத்துப்பாண்டியும் கௌசல்யாவும் இணைந்து வீட்டிற்கு பின்புறம் புதைத்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் முனியாண்டி சேடப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண் சிசுவின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.

இதற்கிடையில் முத்து பாண்டியும், கௌசல்யாவும் தலைமறைவாகினர். அதன்பின் தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது 3-வதாக பெண் குழந்தை பிறந்ததால் தம்பதியினர் இருவரும் குழந்தையின் தலையை சுவரில் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். அதன் பிறகு யாருக்கும் தெரியாமல் குழந்தையின் சடலத்தை வீட்டிற்கு பின்புறம் புதைத்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-N.V.கண்ணபிரான்.

Comments