192 நாடுகள் பங்கேற்கும் கண்காட்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்..!!

   -MMH 

    சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று 24 ம்தேதி மாலை 4 மணியளவில் தனி விமானத்தில் துபாய் செல்கிறார்.

192 நாடுகள் பங்கேற்கும் கண்காட்சியில் பங்கேற்பதற்காக மு.க ஸ்டாலின் துபாய் செல்ல உள்ளார். இந்த கண்காட்சியில் தமிழ்நாடு அரசு சார்பாக கைத்தறி, விவசாயம், தொழில் தொடங்க அழைப்பு விடுக்கப்படும் வகையில் அரங்கு அமைய உள்ளது. தமிழ்நாடு சார்பாக அமைக்கப்பட உள்ள காட்சி அரங்கில் மு.க ஸ்டாலின் பங்கேற்கிறார். 
தமிழக முதல் அமைச்சராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதலீட்டை ஈர்க்க முதன் முறையாக வெளிநாடு சுற்றுப்பயணம் செல்ல உள்ளார்.

தமிழக அரசு சார்பில் சுற்றுலா, கலாசாரம் மற்றும் அறநிலையத் துறை உள்ளிட்ட துறைகள் பங்கேற்க உள்ளன. இதற்காக, கலாசார குழுவை சேர்ந்த 12 பேர், அரசு அலுவலர்கள் 10 பேர் கண்காட்சிக்கு செல்ல உள்ளனர்.அதற்காக, தமிழக அரசு 5 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது

6 நாள் பயணமாக துபாயில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பின்னர் 29 ம்தேதி பிற்பகல் இரண்டு மணியளவில் சென்னை வருகிறார் .

நாளைய வரலாறு செய்திகளுக்காக திருவல்லிக்கேணி அப்துல் ரஹீம்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று 24 ம்தேதி மாலை 4 மணியளவில் தனி விமானத்தில் துபாய் செல்கிறார்.

192 நாடுகள் பங்கேற்கும் கண்காட்சியில் பங்கேற்பதற்காக மு.க ஸ்டாலின் துபாய் செல்ல உள்ளார். இந்த கண்காட்சியில் தமிழ்நாடு அரசு சார்பாக கைத்தறி, விவசாயம், தொழில் தொடங்க அழைப்பு விடுக்கப்படும் வகையில் அரங்கு அமைய உள்ளது. தமிழ்நாடு சார்பாக அமைக்கப்பட உள்ள காட்சி அரங்கில் மு.க ஸ்டாலின் பங்கேற்கிறார். 

தமிழக முதல் அமைச்சராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதலீட்டை ஈர்க்க முதன் முறையாக வெளிநாடு சுற்றுப்பயணம் செல்ல உள்ளார்.

தமிழக அரசு சார்பில் சுற்றுலா, கலாசாரம் மற்றும் அறநிலையத் துறை உள்ளிட்ட துறைகள் பங்கேற்க உள்ளன. இதற்காக, கலாசார குழுவை சேர்ந்த 12 பேர், அரசு அலுவலர்கள் 10 பேர் கண்காட்சிக்கு செல்ல உள்ளனர்.அதற்காக, தமிழக அரசு 5 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது

6 நாள் பயணமாக துபாயில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பின்னர் 29 ம்தேதி பிற்பகல் இரண்டு மணியளவில் சென்னை வருகிறார் .

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-அப்துல் ரஹீம் திருவல்லிக்கேணி.

Comments