மின்சாரம் தாக்கி சிறுவன் பலி!!

   -MMH 

   கோவை பேரு ஊரைச் சேர்ந்த கருப்பையா என்பவரது மகன் விக்னேஸ்வரன் (வயது 17). இவர் கோவைப்புதூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் பேரூர்  ராம செட்டிபாளையம் பகுதியில் வேலைக்குச் சென்ற இவர் அங்கு இரும்பு கம்பிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மேலே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்சார கம்பியில் இரும்புக்கம்பி பட்டது இதில் மின்சாரம் பாய்ந்து விக்னேஸ்வரன் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் விக்னேஸ்வரன் இறந்துவிட்டதாக தெரிவித்தார். பின்னர் இச்சம்பவம் குறித்து பேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விக்னேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு

Comments