வேலூர் அருகே பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை!

   -MMH 

   வேலூர் அருகே சரியாக படிக்கவில்லை என பெற்றோர் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை இவரது மகன் பிரவீனா (17 )இவர் வேலபாடியில் உள்ள விநாயகர் முதலியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.இந்த நிலையில் பிரவீனாவுக்கு படிப்பு சரியாக வரவில்லை என கூறப்படுகிறது.

பொதுத் தேர்வு நெருங்கி விட்டதால் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் பிரவீனா மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார் இந்த நிலையில் வாழ்க்கை விரக்தி அடைந்த அவர்  வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த பெற்றோர் பிரவீனா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு கதறி அழுதனர். தகவலறிந்த வேலூர் தாலுகா போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த சம்பவம் குறித்து தந்தை அண்ணாமலை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் சரியாக படிக்கவில்லை என பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

-P. இரமேஷ் வேலூர்.

Comments