500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம்!!

   -MMH 

   நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள்  500-க்கும் மேற்பட்டோர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம்!!

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.நகரப்பகுதிகளில் சாக்கடை அடைப்புகளை சரி செய்வது சேகரமாகும் குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து அனுப்பும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.கொரோனா வைரஸ் தொற்றின் போது மருத்துவமனை மற்றும் சுகாதார மையங்களில் இவர்களின் சேவை இன்றிமையாததாக இருந்தது. 

முகக்கவசம்,கையுறை, மற்றும் பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கபடவில்லை எனவும்  தினசரி 390 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டு 350 ரூபாய் மட்டுமே வழங்கி வந்ததாக கூறியவர்கள் தொழிலாளர் வைப்பு நிதி மற்றும் பல்வேறு காரணங்களுக்காக வழங்கப்படும் கூலியில் பிடித்தம் செய்வதாகவும் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகரமன்ற உறுப்பினர்கள் இடைவிடாது பணியாற்ற சொல்லி வற்புருத்துவதால்மேலும் வார விடுமுறை நாட்களில் சம்பளம் இல்லாமல் பணிக்கு வர அதிகாரிகள் வற்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளாவதாக தெரிவித்து பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு சார் ஆட்சியர் அலுவலகத்தை முபோராட்டம்ற்றுகையிட்டனர்.போராட்டம் காரணமாக நகர பகுதிகளில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.நகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையில் நடத்த முன்வராத காரணமாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது!!

நாளைய வரலாறு செய்திக்காக 

-அலாவுதீன் ஆனைமலை.

Comments