கிணத்துக்கடவு அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகை திருட்டு!!

    -MMH 

   கிணத்துக்கடவு அருகே கோதவாடியில்  பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரியாக கோதவாடியை சேர்ந்த மாரிமுத்து உள்ளார். வழக்கம் போல் கோவிலைத் திறந்து பூஜைகள் செய்ய பூசாரி கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கோவிலைத் திறந்து பார்த்தார். 

அப்போது கோவிலில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் அம்மன் சிலையின் கழுத்தில் கிடந்த 4 கிராம் தங்கத் தாலி செயின் மற்றும் கோவில் பொருட்கள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.  இச்சம்பவம் குறித்து பொன்மலை வேலாயுதசாமி கோவில் செயல் அலுவலர் சரவணன் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு தகவல் கொடுத்தார். மேலும், கிணத்துக்கடவு போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசர்ா வழக்குப்பதிவு செய்து கோவிலின் பூட்டை உடைத்து நகை மற்றும் பொருட்களை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments