காவலாளிக்கு 20 ஆண்டு சிறை!!

   -MMH 

   கோவை 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் ரவிசந்திரன் (வயது 57). இவர் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணி புரிந்தார். அங்கு நான்கு வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்தார். இதனை கண்ட குடியிருப்புவாசிகள் அவரை பிடித்து சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, 2020, நவ., 23ல் அவரை கைது செய்தனர்.

கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி குலசேகரன், ரவிச்சந்திரனுக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு தரப்பில் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments