ரூ.40 செலவில் 280 கி.மீ பயணிக்கும் ஜீப்பை உருவாக்கி அசத்திய சிவகங்கை இளைஞர்..!!

   -MMH 

   நான்கு சக்கரங்களும் தனித்தனியாக இயங்கும் திறனுடன் பேட்டரியில் இயங்கும் ஜீப்பை வடிவமைத்து அசத்தி இருக்கிறார் இந்த இளைஞர்.

இன்றைய காலகட்டத்தில் கார் என்பது அவசியமான ஒன்றாக உள்ளது. அதிலும், தற்போது இருக்கின்ற பெட்ரோல், டீசல் விலை காரணங்களால் கார் என்பது கனவாகவே போய்விடும் போல்  ஒரு பக்கம் எலக்ட்ரிக்கல் கார்கள் விலை அதிகம் ஒருபக்கம் அதற்கு எல்லாம் மாற்றாக கிராமத்து இளைஞர் உருவாக்கிய ஜீப்பிற்க்கு தேவையான உதிரிப் பாகங்களை கொண்டு சுற்றுச்சூழல் மாசுபடாத வகையிலும் டீசல், பெட்ரோலுக்கு மாற்றாக குறிப்பாக விவசாயத் தேவைக்கு பயன்படுத்துகின்றன மாதிரி ஒரு ஜீப் வடிவமைத்து அசத்தி வருகிறார் யார் அந்த இளைஞர் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சிவகங்கை மாவட்டம்  கீழடி என்றாலே நகர நாகரீக எடுத்துக்காட்டாக விளங்கும் உலகின் தொன்மையான பொருட்கள் தமிழனின் வாழ்விடம் முறைகள் மட்டுமே நம் நினைவிற்கு வரும் அப்படிப்பட்ட கிராமத்தில் விவசாயிகளான, அருணகிரி -கவிதா தம்பதியரின் ஒரே மகன் கவுதம் ஏழ்மை நிலையிலும்  தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கனிக்கல் எஞ்சினியரிங் பயின்று முடித்துள்ளார்.

ராணுவத்தில் சேர வேண்டும் என்ற கனவுடன் இருந்துள்ளார். படித்து முடித்துவிட்டு சில நாட்கள் வேலையில்லாமல் கம்பி கட்டுகின்ற வேலைக்கும் சென்று உள்ளார், என்னப்பா படித்து முடித்துவிட்டு கம்பி கட்டுற வேலைக்கு எல்லாம் போய் கொண்டிருகின்ற என வீட்டில் வேதனைப்பட்டு உள்ளனர்.

தொடர்ந்து வீட்டிலிருந்த கௌதமுக்கு மாசு ஏற்படாத வகையில் கார் ஒன்றையும் விவசாயத் தேவைக்கு பயன்படுத்துவதற்கும் வகையில் ஜீப் ஒன்றை தயார் செய்து பார்ப்போம் என தோன்றியது குறிப்பாக தற்போது விற்கும் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக பேட்டரியில் இயங்கக் கூடும் ஜீப் ஒன்றை, பழைய பொருட்களை கொண்டு உருவாகியுள்ளார்.

நான்கு சக்கரங்களும் தனித்தனியாக இயங்கும் திறனுடன் பேட்டரியில் இயங்கும் ஜீப்பை வடிவமைத்து அசத்தி இருக்கிறார் இந்த இளைஞர், கூலி வேலை செய்து சம்பாதித்த பணத்தையும் பெற்றோர்கள் கடனாக பெற்றுதந்த பணத்தையும் கொண்டு சுமார் ரூ.2,40,000 செலவில் இந்த காரை உருவாக்கியுள்ளதாக கூறும் இந்த இளைஞர் பேட்டரி வாங்க வசதியில்லாத நிலையில் வாடகைக்கு பேட்டரி வாங்கி இந்த ஜிப்பை தயாரித்துள்ளார்.

இந்த ஜீப்பில் லித்தியம் பேட்டரி வாங்கி பயன்படுத்தினால் சுமார் நாற்பது ரூபாய் செலவில் இருநூற்றி என்பது கிலோ மீட்டர் தூரம் பயணிக்கலாம் குறிப்பாக எந்த ஒரு  சவுண்ட்  இரைச்சால் இல்லாமல் ஜீப்பை தயாரித்து உள்ளார்.

மேலும், விவசாய தேவைக்கு  உரமூடைகள் கொண்டு செல்வதற்கும் இந்த வாகனம் எளிமயாக பயன்படுவதாகவும் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக விவசாய பொருட்களை டிராக்டரில் கொண்டு செல்லும்போது அதற்கான டீசல்  விலையை விட குறைந்த அளவே பேட்டரியில் இயங்கக்கூடிய அந்த ஜீப் பயன்படுகிறது. இதனால் மிகப்பெரிய செலவு மிச்சம் அடைவதாகவும் கூறப்படுகிறது.

ஜீப்பிற்கான  உதிரிபாகங்கள் பல இடங்களில் பழைய பொருட்களை கொண்டு அதனை வாங்கி வந்து வீட்டிலேயே ஜீப்பை உருவாக்கியதாக கூறுகிறார் இதில் ஜீப்பிற்க்கு  பயன்படுத்தும் டயர்கள் மட்டும் அதிக செலவானதாக கூறுகிறார்.

தற்போது வாடகைக்கு வாங்கி பேட்டரிகளை கொண்டு பயன்படுத்தி வருவதாகவும் இதற்கு அரசு எனக்கு உதவினால் இதேபோன்று மோட்டார் சைக்கிளில் பேட்டரி கொண்டு நான் ஒரு கிலோ மீட்டர் வரை செல்லக்கூடிய பைக்குகள் உருவாக்க முடியும் என்கிறார் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் மாணவர்.

நாளைய வரலாறு செய்திக்காக 

-ஹனீப் கோவை.

Comments