மேட்டுப்பாளையம் -ஊட்டி இடையே கோடை சிறப்பு மலை ரெயில்!

 

-MMH

மலைகளின் அரசி என்று வர்ணிக்கப்படும் ஊட்டிக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த மலை ரயிலில் பயணித்தபடி நீலகிரி மலையின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவார்கள். ஊட்டியில் தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளதாலும், விடுமுறை விடப்பட்டதாலும் மலைரெயிலில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் 

மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே கோடை கால சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு நாளை முதல் வருகிற ஜூலை மாதம் 16-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் 9 முறை இயக்கப்படுகிறது.இதேபோன்று ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வருகிற 27-ந் தேதி முதல் ஜூலை மாதம் 22-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் 9 முறை இயக்கப்பட உள்ளது. சிறப்பு ரெயில் மேட்டுப்பாளையத்தில் காலை 9.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.25 மணிக்கு ஊட்டியை சென்றடைகிறது.

ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடைகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு முதல் வகுப்பு ரூ.1,210, 2-ம் வகுப்பு ரூ.815, ஊட்டிக்கு முதல் வகுப்பு ரூ.1,575, 2-ம் வகுப்பு ரூ.1,065 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதற்கான முன்பதிவு. தொடங்கியுள்ளது.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments