பூண்டி வெள்ளியங்கிரி மலையேறி உயிரிழப்பு!!

   -MMH 

   சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் இளஞ்செழியன் (55). இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவை வந்த இவர் நேற்று முன்தினம் தனது நண்பருடன் பூண்டி வெள்ளியங்கிரி  மலையேறி 7-வது மலையில் லிங்கம் வடிவில் காட்சியளிக்கும் சிவபெருமானை தரிசனம் செய்துவிட்டு, நேற்று காலை கிரிமலையில் இருந்து இறங்கி வந்துள்ளனர். காலை 9.30 மணியளவில் 6-வது மலையை தாண்டி வரும்போது இளஞ்செழியன் திடீரென  மயங்கி கீழே விழுந்தார். அப்போது மலையேற வந்த டாக்டர் ஒருவர் விரைந்து வந்து இளஞ்செழியனை பரிசோதனை செய்தார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளஞ்செழியன் உடலை மலையில் இருந்து கீழே கொண்டு வந்தனர். இந்த சம்பவம் குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments