27ஆம்தேதி வங்கிகள் ஸ்ட்ரைக் மூன்று நாட்கள் தொடர்ந்து மூடப்படும்..??!!!...

 -MMH 

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், தேசிய வங்கி ஊழியர்கள் அமைப்பு, உட்பட 9 வங்கி சங்கங்களை உள்ளடக்கிய வங்கி சங்கங்களின் ஒருங்கிணைப்பு அமைப்பு 27ஆம்தேதி அன்று வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

வருகின்ற இருபத்தி ஏழாம் தேதி ஒரு நாள் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது வேலை நிறுத்த போராட்டத்திற்கு அதிகாரிகளும் கலந்து கொள்வதால் வங்கிகள் அன்று முழுமையாக மூடப்படும் அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் மும்பையில் நடந்தது இக் கூட்டத்தில் வருகிற 27-ஆம் தேதி ஒருநாள் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்து என்று முடிவு செய்யப்பட்டது.

1. வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை வழங்க வேண்டும் 2. ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும்.3. 2010க்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஸ்ட்ரைக் நடைபெறுகிறது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-அலாவுதீன், ஆனைமலை.

Comments